தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

1980களில் தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் சில்க் ஸ்மிதா. தன் அழகாலும், ஆட்டத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர். புகழின் உச்சியில் இருந்தபோதே தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்தது. ஹிந்தியில் 'தி டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் சினிமா ஆனது. வித்யா பாலன், சில்க் ஸ்மிதாவாக நடித்தார். இதற்காக அவர் தேசிய விருதும் பெற்றார்.
தமிழில் 'ஒரு நடிகையின் டைரி' உள்ளிட்ட பல படங்கள் தயாரானது. தற்போது மீண்டும் அவரது வாழ்க்கை திரைப்படமாகிறது. "சில்க் ஸ்மிதா: குயின் ஆப் தி சவுத்" என்ற பெயரில் எஸ்டிஆர்ஐ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதனை இந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் சந்திரிகா ரவி, சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார். ஜெயராம் சங்கரன் இயக்குகிறார். விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.




