ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படத்தில் தனுஷின் நண்பராக காமெடி வேடத்தில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அந்த படத்தில்தான் அனிருத்தும் அறிமுகமானார். அதன்பிறகு பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் ஹீரோவானார் சிவகார்த்திகேயன். பின்னர் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், டாக்டர், மாவீரன், அமரன் என பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் அளித்துள்ள ஒரு பேட்டியில், என் மனைவி மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ சினிமாவில் இருந்து வெளியேறி இருப்பேன் என்று கூறியிருக்கிறார். காரணம், சினிமாவில் யார் எங்கிருந்து நம்மை நோக்கி அம்பு விட்டு தாக்குவார்கள் என்று சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு பிரச்சனைகள் பல ரூபத்தில் வந்து நம்மை தாக்கும். அது போன்ற ஒரு பிரச்சனையால் ஒருமுறை பெரிய அளவில் நான் மனசுடைந்து விட்டேன். சினிமா வை விட்டே வெளியேற முடிவெடுத்தேன். அப்போது என் மனைவி தான் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து சமாளியுங்கள். சினிமாவை விட்டு மட்டும் ஒருபோதும் செல்லக்கூடாது என்று சொன்னார். அவர் அப்படி சொன்ன பிறகுதான் எந்த பிரச்னை வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிப்போம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்படி என் மனைவி சொல்லவில்லை என்றால் சினிமாவை விட்டு எப்போதோ வெளியேறி இருப்பேன் என்று கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.