ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

டில்லியில் விமான படையில் பணியாற்றிய கணேஷ் அங்கு நாடகங்களிலும் நடித்து வந்தார். அதன்பிறகு சென்னை வந்து டெல்லி கணேஷ் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்தார். குணசித்ர வேடங்களில் அறிமுகமாகி குணசித்ர கேரடர்களில் மட்டுமே 500 படங்களுக்கு மேல் நடித்தார்.
அவர் முதன் முறையாக ஹீரோவாக நடித்த படம் 'எங்கம்மா மகராணி'. எம்.ஏ.காஜா இயக்கிய இந்த படத்தில் டெல்லி கணேஷ் நாயகனாகவும், சுமித்ரா நாயகியாகவும் நடித்தார்கள். இவர்களுடன் ரூபா, சுருளிராஜன், நளினிகாந்த், ராகினி, ஒய்.விஜயா ஆகியோரும் நடித்தார்கள். வியட்நாம் வீடு சுந்தரம் வசனம் எழுதியிருந்தார். சங்கர்-கணேஷ் இசை அமைத்திருந்தனர்.
ஸ்ரீ காயத்ரி என்டர்பிரைசஸ் சார்பில் மாணிக்கம் செட்டியார் தயாரித்திருந்தார். படத்தில் இடம் பெற்ற 'மாலையில் பூத்த...' என்ற பாடல் புகழ்பெற்றது. இதனை எழுதிய புலமைப்பித்தனுக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசு விருது கிடைத்தது. பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடி இருந்தனர். நடுத்தர குடும்பத்திற்குள் நடக்கும் கலாட்டாக்களை வைத்து உருவான படம்.