செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
டில்லியில் விமான படையில் பணியாற்றிய கணேஷ் அங்கு நாடகங்களிலும் நடித்து வந்தார். அதன்பிறகு சென்னை வந்து டெல்லி கணேஷ் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்தார். குணசித்ர வேடங்களில் அறிமுகமாகி குணசித்ர கேரடர்களில் மட்டுமே 500 படங்களுக்கு மேல் நடித்தார்.
அவர் முதன் முறையாக ஹீரோவாக நடித்த படம் 'எங்கம்மா மகராணி'. எம்.ஏ.காஜா இயக்கிய இந்த படத்தில் டெல்லி கணேஷ் நாயகனாகவும், சுமித்ரா நாயகியாகவும் நடித்தார்கள். இவர்களுடன் ரூபா, சுருளிராஜன், நளினிகாந்த், ராகினி, ஒய்.விஜயா ஆகியோரும் நடித்தார்கள். வியட்நாம் வீடு சுந்தரம் வசனம் எழுதியிருந்தார். சங்கர்-கணேஷ் இசை அமைத்திருந்தனர்.
ஸ்ரீ காயத்ரி என்டர்பிரைசஸ் சார்பில் மாணிக்கம் செட்டியார் தயாரித்திருந்தார். படத்தில் இடம் பெற்ற 'மாலையில் பூத்த...' என்ற பாடல் புகழ்பெற்றது. இதனை எழுதிய புலமைப்பித்தனுக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசு விருது கிடைத்தது. பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடி இருந்தனர். நடுத்தர குடும்பத்திற்குள் நடக்கும் கலாட்டாக்களை வைத்து உருவான படம்.