300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
டில்லியில் விமான படையில் பணியாற்றிய கணேஷ் அங்கு நாடகங்களிலும் நடித்து வந்தார். அதன்பிறகு சென்னை வந்து டெல்லி கணேஷ் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்தார். குணசித்ர வேடங்களில் அறிமுகமாகி குணசித்ர கேரடர்களில் மட்டுமே 500 படங்களுக்கு மேல் நடித்தார்.
அவர் முதன் முறையாக ஹீரோவாக நடித்த படம் 'எங்கம்மா மகராணி'. எம்.ஏ.காஜா இயக்கிய இந்த படத்தில் டெல்லி கணேஷ் நாயகனாகவும், சுமித்ரா நாயகியாகவும் நடித்தார்கள். இவர்களுடன் ரூபா, சுருளிராஜன், நளினிகாந்த், ராகினி, ஒய்.விஜயா ஆகியோரும் நடித்தார்கள். வியட்நாம் வீடு சுந்தரம் வசனம் எழுதியிருந்தார். சங்கர்-கணேஷ் இசை அமைத்திருந்தனர்.
ஸ்ரீ காயத்ரி என்டர்பிரைசஸ் சார்பில் மாணிக்கம் செட்டியார் தயாரித்திருந்தார். படத்தில் இடம் பெற்ற 'மாலையில் பூத்த...' என்ற பாடல் புகழ்பெற்றது. இதனை எழுதிய புலமைப்பித்தனுக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசு விருது கிடைத்தது. பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடி இருந்தனர். நடுத்தர குடும்பத்திற்குள் நடக்கும் கலாட்டாக்களை வைத்து உருவான படம்.