Advertisement

சிறப்புச்செய்திகள்

மூன்று மாதம் வெயிலில் நின்று கறுப்பானேன் - 'கொட்டுக்காளி' சாய் அபிநயா | நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம்

29 நவ, 2024 - 01:55 IST
எழுத்தின் அளவு:
I-dont-want-an-AI-voice-for-my-father;-SPP-Sarans-plan


மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். இன்றும் பல தளங்களில் அவரது பாடல்கள் ஏதோ ஒரு விதத்தில் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டே இருக்கின்றன. அதே சமயம் தற்போது வேகமாக பரவி வரும் ஏ ஐ என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இப்படி இறந்து போனவர்களின் குரலை மீள் உருவாக்கம் செய்து புதிய படங்களில் பாட வைக்கும் போக்கு துவங்கியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான், அனிருத், யுவன் சங்கர் ராஜா போன்றவர்கள் இதுபோன்று முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக 'தி கோட்' படத்தில் மறைந்த பவதாரணியின் குரலில் ஒரு பாடலையும், 'வேட்டையன்' படத்தில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கி இருந்தார்கள். ஆனாலும் இவை பரபரப்பாக பேசப்பட்டதே தவிர பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

இந்த நிலையில் தனது தந்தை எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் குரலில் இதுபோன்று செயற்கை நுண்ணறிவு மூலம் மீண்டும் பாடல்கள் பாட வைப்பதில் தனக்கு விருப்பமில்லை என கூறியுள்ளார் அவரது மகனும் நடிகரும் பாடகருமான எஸ்பிபி சரண். இது குறித்து அவர் சமீபத்தில் கூறும்போது, “என்னதான் இப்படி பாடல்களை மறு உருவாக்கம் செய்தாலும் மறைந்தவர்களின் குரல்களில் மீண்டும் பாடல்களை பாடுவதாக உருவாக்கினாலும் அவர்கள் ஒரிஜினலாக பாடியபோது ஏற்பட்ட அந்த உணர்வுகளை நிச்சயமாக இவற்றில் கொண்டு வர முடியாது.

ஒரு டெக்னாலஜி கையில் இருக்கிறதனால எதுனாலும் பண்ணலாமா? தப்பா எடுத்துக்க வேண்டாம் இப்ப எஸ்பிபி இருந்திருந்தால் ஒருவேளை இந்தப் பாட்டு கேட்டுட்டு இந்தப் பாட்டு வேண்டாமே நான் பாட மாட்டேன்னு சொல்லியிருக்கலாம். இந்தப் பாட்டு நான் பாடுறேன், பாடலைங்கிற முடிவை பாடகர்கள் எடுப்பாங்க. ஏஐ அந்த வாய்ப்பை கொடுக்காது. நம்ம அவங்க மேல உள்ள அன்பால எல்லா பாட்டும் அவங்க பாடினா நல்லா இருக்கும்னு நினைக்கிறோம். அந்தக் குரலை கொண்டு வந்திடலாம். ஆனா, எமோஷனஸை கொண்டு வர முடியாது.

எஸ்பிபி.,யின் குரல் அவர் குரலாகவே இருந்து விட்டுப் போகட்டும்.. யாரோ ஒரு டாம் டிக் மற்றும் ஹாரி ஆகியோரின் இசையில் அவர் குரலை கேட்பதில் எனக்கும் என் குடும்பத்திற்கும் விருப்பமில்லை. அப்படி நிறைய பேர் கேட்டு வந்தும் அவர்களுக்கு நான் ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டேன். அவர் அவராகவே இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்துசீனாவில் விஜய் சேதுபதியின் ... புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in