என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பிஸியான முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தனது திருமண முறிவுக்கு பிறகும் மயோசிடிஸ் என்கிற நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாலும் படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டு செலெக்ட்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதேசமயம் தன்னை லைம்லைட்டிலேயே தொடர்ந்து வைத்துக் கொள்ளும் விதமாக சோசியல் மீடியாவில் தான் கலந்து கொளும் நிகழ்வுகள் மற்றும் வாழ்க்கை தத்துவங்கள் என ஏதாவது தொடர்ந்து பகிர்ந்து கொண்டே வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஆங்கில எழுத்தாளரும் நாவலாசிரியருமான ருத்யார்டு கிப்ளிங் என்பவர் எழுதிய ஒரு செயுளை மேற்கோள் காட்டி சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் தன்னம்பிக்கை பெறுவதற்காக இதை தான் நான் மனதில் ஏற்றிக் கொள்கிறேன் என்று கூறி சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
இதைப்பார்த்த பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், “சமந்தா சொல்வது உண்மைதான். இவர் கூறியுள்ள இந்த செயுளை நான் அப்படியே என் வீட்டில் போட்டோ பிரேம் ஆக மாட்டி வைத்து உள்ளேன். எப்போதெல்லாம் எனக்கு உற்சாகம் இழப்பதாக தோன்றுகிறதோ அப்போது இதை பார்த்து தன்னம்பிக்கை ஏற்றிக் கொள்வேன்” என்று கூறியுள்ளார். அர்ஜுன் கபூரின் இந்த பதிலுக்கு சமந்தா வெள்ளை இதயம் கொண்ட எமோஜியை பதிலாக அளித்துள்ளார்.