ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி, ஜெயம் ரவி - ஆர்த்தி ஆகியோரை தொடர்ந்து இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா பானு ஆகியோர் பிரிவதாக அறிவித்திருப்பது திரையுலகினர், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான், ஆஸ்கர் விருது பெறும் அளவுக்கு உலகளவில் உயர்ந்தார். தற்போதும் இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். 1995ல் சாய்ரா பானுவை திருமணம் செய்தார். இவர்களுக்கு கதீஜா, ரஹீமா என்ற இரு மகள்கள், அமீன் என்ற ஒரு மகன் உள்ளனர். 29 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் இப்போது பிரிவதாக அறிவித்துள்ளனர்.
‛‛தீர்க்க முடியாத இடைவெளி உருவாகி விட்டது. இதை யாராலும் சரி செய்ய முடியாது. ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவது என்ற வேதனையான முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா பானு'' தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த முடிவு பற்றி ரஹ்மான் வெளியிட்ட பதிவில், ‛‛திருமண வாழ்வில் 30 ஆண்டுகளை தொட்டுவிடுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பாராமல் இப்படி ஒரு முடிவு வந்துவிட்டது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அதன் அர்த்தத்தை தேடுகிறோம். இதை நாங்கள் கடந்த செல்ல எங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மரியாதை தரும் நண்பர்களின் அன்புக்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.