ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வெளிவந்த படங்களை ஆங்கில அரசு தணிக்கை செய்தது. படத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான வசனமோ, காட்சிகளோ இருந்தால் அந்த படத்தை தடை செய்து விடுவார்கள். இந்த மாதிரியான நேரத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தையும், அவர்கள் இந்தியர்களுக்கு செய்யும் கொடுமைகள் பற்றியும் வெளிவந்த படம்தான் 'மாத்ருபூமி'.
அப்போது வங்கத்தில் நடத்தப்பட்டு வந்த 'சந்திரகுப்தா' என்ற நாடகத்தைதான் திரைப்படமாக இயக்கினார் எச்.எம்.ரெட்டி. இந்த நாடகம் அலெக்சாண்டர் படையெடுப்பையும் அவரை எதிர்த்த சந்திரகுப்ப மவுரியரையும் பற்றிய கதை. அந்த கதையை அப்படியே படமாக்கி அலெக்சாண்டர் படையெடுப்பை, ஆங்கிலேயர்கள் ஆக்கிரமிப்பாகவும், அவர் செய்த அடக்குமுறைகளை ஆங்கிலேயர்களின் அடக்குமுறையாகவும், சந்திரகுப்த மவுரியரின் போராட்டத்தை சுதந்திர போராட்டமாகவும் உருவகப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது.
இதில் டி.எஸ்.சந்தானம், பி.யூ.சின்னப்பா, டி.வி.குமுதினி, காளி என்.ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் போர் காட்சிகள் செஞ்சிக்கோட்டை, கிருஷ்ணகிரி கோட்டையில் படமாக்கப்பட்டது. 2 ஆயிரம் பேர் நடித்தனர். இந்த படம் வெளியீட்டுக்கு தயாரானபோது தமிழகத்தில் ராஜாஜி முதல்வர் ஆனார். அவர் ஆட்சிக்கு வந்ததும் தணிக்கை விதிமுறைகளை தளர்த்தினார். இதனால் எந்த சிக்கலும் இல்லாமல் இந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.