கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக 'சிறந்த சவுண்ட் மிக்சிங்' ஆஸ்கர் விருது, 'பழசிராஜா' மற்றும் 'ஒத்த செருப்பு சைஸ் 7' ஆகிய படங்களுக்காக சிறந்த ஆடியோகிராபி தேசிய விருதுகள், ஆகியவற்றைப் பெற்றவர் சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. தமிழில், “எந்திரன், கோச்சடையான், ரெமோ, 2.0, ஒத்த செருப்பு சைஸ் 7,' உள்ளிட்ட படங்கள் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பணியாற்றி வருபவர் ரசூல் பூக்குட்டி.
சூர்யா நடிப்பில் நேற்று வெளியான 'கங்குவா' படம் பற்றிய அவரது பதிவு ஒன்றை, படத்தின் விமர்சனக் கருத்து அடங்கிய புகைப்படம் ஒன்றுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “என்னுடைய நண்பர், ரீ ரிக்கார்டிங் மிக்சர் இந்த கிளிப்பை எனக்கு அனுப்பினார். நமது பிரபலமான படங்களில் ஒலி பற்றிய இது போன்ற விமர்சனத்தைப் பார்ப்பது மன வருத்தமாக இருக்கிறது. எங்கள் கைவினைத் திறனும், கலைத் திறனும் உரத்தப் போரில் சிக்கிக் கொண்டது யார் குற்றம்? சவுண்ட் அமைப்பைச் செய்தவருடையதா? அனைத்து பாதுகாப்பில்லாத தன்மையைப் போக்க கடைசி நேரத்தில் எண்ணற்ற திருத்தங்கள் வருகின்றன. எங்களது கலைஞர்கள் பல சமயங்கள் உங்கள் கால்களில் விழுந்து எல்லாவற்றையும் சத்தமாகவும், தெளிவாகவும் சொல்கிறார்கள். தலைவலியுடன் ரசிகர்கள் ஒரு படத்தை விட்டு வெளியேறும் போது அந்தப் படத்திற்கு ரிபீட் மதிப்பு திரும்ப கிடைக்காது,” என வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
'கங்குவா' படத்தைப் பார்த்த விமர்சகர்கள், எண்ணற்ற ரசிகர்கள் சொல்லும் முக்கிய குறை படத்தின் சத்தம், இரைச்சல். ஆரம்பம் முதல் கடைசி வரை கதாபாத்திரங்கள் பேசுவதை விட கத்திக் கொண்டே இருப்பதும், பின்னணி இசை அதிக ஒலியுடன், இரைச்சலாக இருப்பதுமே இந்தப் படத்தின் முக்கியமான நெகட்டிவ் அம்சமாக உள்ளது. அதை உடனடியாகத் திருத்தினால் மட்டுமே ரசிகர்கள் அச்சமில்லாமல் வந்து பார்க்க வாய்ப்பாக இருக்கும்.