பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு |

எண்பதுகளின் இறுதியில் தமிழில் வெளியான பூந்தோட்ட காவல்காரன், நல்லவன், மண்ணுக்குள் வைரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை வாணி விஸ்வநாத். மலையாள திரை உலகில் ஒரு விஜயசாந்தி என்று சொல்லும் அளவிற்கு பல படங்களில் அதிரடி போலீஸ் அதிகாரியாக அதிக படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகள் அனைத்திலும் சேர்த்து 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட வாணி விஸ்வநாத் மலையாள வில்லன் நடிகர் ஆன பாபுராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இதனால் சினிமாவில் நடிக்காமல் பல வருடம் ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து மலையாளத்தில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் வாணி விஸ்வநாத். அந்த வகையில் தற்போது ரைபிள் கிளப், ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். இதில் ரைபிள் கிளப் படம் பிரபல இயக்குனர் ஆஷிக் அபு இயக்கத்தில் உருவாகிறது. இதில் ஒரு மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். அதே சமயம் ஒரு அன்வேசத்தின்டே துவக்கம் படத்தில் ஒரு வில்லத்தனம் வாய்ந்த லேடி தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். இது ஒரு புலனாய்வு திரில்லர் ஆக உருவாகிறது.