'கர' படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த தனுஷ் | கோடிகளில் சம்பளம்... ஆனாலும் மகிழ்ச்சி இல்லை : அனிருத் | பிளாஷ்பேக்: தமிழ் திரையிசையில் முதல் கானா பாடலை அறிமுகப்படுத்திய “பொம்மலாட்டம்” | 2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! |

எண்பதுகளின் இறுதியில் தமிழில் வெளியான பூந்தோட்ட காவல்காரன், நல்லவன், மண்ணுக்குள் வைரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை வாணி விஸ்வநாத். மலையாள திரை உலகில் ஒரு விஜயசாந்தி என்று சொல்லும் அளவிற்கு பல படங்களில் அதிரடி போலீஸ் அதிகாரியாக அதிக படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகள் அனைத்திலும் சேர்த்து 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட வாணி விஸ்வநாத் மலையாள வில்லன் நடிகர் ஆன பாபுராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இதனால் சினிமாவில் நடிக்காமல் பல வருடம் ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து மலையாளத்தில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் வாணி விஸ்வநாத். அந்த வகையில் தற்போது ரைபிள் கிளப், ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். இதில் ரைபிள் கிளப் படம் பிரபல இயக்குனர் ஆஷிக் அபு இயக்கத்தில் உருவாகிறது. இதில் ஒரு மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். அதே சமயம் ஒரு அன்வேசத்தின்டே துவக்கம் படத்தில் ஒரு வில்லத்தனம் வாய்ந்த லேடி தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணி விஸ்வநாத். இது ஒரு புலனாய்வு திரில்லர் ஆக உருவாகிறது.




