இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் 'துரந்தர் 2' | சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் |

பிக்பாஸ் சீசன் 8ல் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில், குறும்படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்து பிரபலமான சவுந்தர்யா நஞ்சுண்டானும் கலந்து கொண்டு ஸ்கோர் செய்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் நடந்த சோகமான நிகழ்வினை கூறி வந்தனர். அதில், சவுந்தர்யாவும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த 17 லட்ச ரூபாய் பணத்தை ஒரு பிராடு போன் காலில் இழந்ததாக கூறியிருந்தார். இதனை பலரும் பொய் என விமசித்து வந்தனர்.
இந்நிலையில் சவுந்தர்யா நஞ்சுண்டான் கடந்த செம்படம்பர் மாதம் பணம் தொலைந்ததற்காக அளித்துள்ள போலீஸ் புகாரின் புகைப்படத்தையும் அப்போது அவர் பதிவிட்ட சோஷியல் மீடியா பதிவையும் ரசிகர்கள் தேடி எடுத்து ஷேர் செய்துள்ளனர். சவுந்தர்யா பணம் தொலைந்ததாக கூறுவது பொய் இல்லை என்றும் நிரூபித்துள்ளனர்.