திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'கங்குவா'. இப்படம் பெரும் பொருட்செலவில் தயாராகி பான் இந்தியா படமாக அடுத்த வாரம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 99 கோடியே 22 லட்ச ரூபாயில் இன்னும் தர வேண்டிய 55 கோடியைத் திருப்பி வழங்காத காரணத்தால் 'கங்குவா' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அது மட்டுமல்ல 'தங்கலான்' படத்தை ஓடிடியில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில் மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் 18 கோடியைத் தந்துவிட்டார்கள். எனவே, 'தங்கலான்' படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு ஆட்சேபனை இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அதன் வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மீதமுள்ள தொகையை நாளை வழங்குகிறோம் எனக் கூறினார். இதையடுத்து நாளை வழக்கை தள்ளி வைத்துள்ளார் நீதிபதி. நாளை மதியத்திற்குள் பணம் வழங்கப்பட்டுவிட்டால் 'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதி திட்டமிட்டபடி வெளியாகும். இல்லையென்றால் வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டி வரும்.