‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் படம் அமரன். வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையில் உருவான இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் மூலம் அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதேபோல் இப்படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் வேடத்தில் நடித்த சாய் பல்லவி நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நேரத்தில் அமரன் படத்தை பார்த்த நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் அவரது நடிப்பை பாராட்டி ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ஜெய் பீம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த கிளாசிக் படம் இந்த அமரன். இப்படத்தின் கடைசி 10 நிமிடத்தில் சாய் பல்லவி நடிப்பு என் இதயத்தை வென்றுவிட்டது என்று அவரது நடிப்பை வெகுவாக பாராட்டி இருக்கிறார் ஜோதிகா.