ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக்...டிக்...டிக் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். துபாயை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நிவேதா பெத்துராஜிடம் ஒரு சிறுவன் ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை அடையாறு சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன். இதையடுத்து அவன் புத்தகத்தை 50 ரூபாய்க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் அவனுக்கு 100 ரூபாய் கொடுத்தேன். உடனே அந்த சிறுவன் என்னிடம் 500 ரூபாய் கேட்டான். அப்போது நான் புத்தகத்தை அவனிடம் திருப்பி கொடுத்து 100 ரூபாயை திரும்ப கேட்டேன். இந்த நேரத்தில் புத்தகத்தை என் காருக்குள் வீசிய சிறுவன் என் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டான். இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்த பிரச்னையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.