ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக்...டிக்...டிக் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். துபாயை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நிவேதா பெத்துராஜிடம் ஒரு சிறுவன் ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை அடையாறு சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன். இதையடுத்து அவன் புத்தகத்தை 50 ரூபாய்க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் அவனுக்கு 100 ரூபாய் கொடுத்தேன். உடனே அந்த சிறுவன் என்னிடம் 500 ரூபாய் கேட்டான். அப்போது நான் புத்தகத்தை அவனிடம் திருப்பி கொடுத்து 100 ரூபாயை திரும்ப கேட்டேன். இந்த நேரத்தில் புத்தகத்தை என் காருக்குள் வீசிய சிறுவன் என் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டான். இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்த பிரச்னையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.