கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக்...டிக்...டிக் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். துபாயை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நிவேதா பெத்துராஜிடம் ஒரு சிறுவன் ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை அடையாறு சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன். இதையடுத்து அவன் புத்தகத்தை 50 ரூபாய்க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் அவனுக்கு 100 ரூபாய் கொடுத்தேன். உடனே அந்த சிறுவன் என்னிடம் 500 ரூபாய் கேட்டான். அப்போது நான் புத்தகத்தை அவனிடம் திருப்பி கொடுத்து 100 ரூபாயை திரும்ப கேட்டேன். இந்த நேரத்தில் புத்தகத்தை என் காருக்குள் வீசிய சிறுவன் என் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டான். இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்த பிரச்னையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.