முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை விக்ரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மாநாட்டுக்கு வரவிருக்கும் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் விஜய்.
அந்த வகையில், இன்று விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‛‛பெயரை போல சில விஷயங்களை திரும்பத் திரும்ப சொல்லியாக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்த போகிறேன். காரணம் எல்லா வகையிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்பும் முக்கியம். ஆகவே மாநாட்டு பயணம் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும். இரு சக்கர வாகன பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்பு கருதியே இதை சொல்லுகிறேன். அதேபோல வருகிற வழியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்யாமல் வரவேண்டும்.
போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு மாநாட்டு பணிக்கான கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்து வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை 27- 10 -2024 நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டுவோம் என்று அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்திருக்கிறார்.