சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'. ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகின்ற அக். 31ந் தேதி தீபாவளி பண்டிகை அன்று திரைக்கு வருகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் கதையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார், அவரின் மனைவி கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இதனை நேர்த்தியான முறையில் படமாக்க பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் ராணுவ வீரர்களின் பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.
இதற்கு ராணுவ வீரர்களின் ஒத்துழைப்பு பெரிதளவில் உள்ளதால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் டில்லியில் உள்ள சில முக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சியில் அவர்களுடன் இணைந்து சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியும் கண்டு ரசித்துள்ளனர்.