‛இது தான் இந்திய ராணுவத்தின் முகம்' : அமரன் டிரைலர் வெளியீடு | நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இருக்க தவறிவிட்டேன் : சமந்தா வருத்தம் | 5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல் | விஜய் 69 பட கதை தொடர்பாக வெளியான தகவல் | காலை 6.34 மணிக்கே சர்தார் 2 படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்! | என் வெற்றிக்கு காரணம் அஜித் தான் : யுவன் | பிளாஷ்பேக் : மதுவின் தீமையை விளக்கிச் சொன்ன மகத்துவமிக்க கவிஞன் 'கவியரசர்' கண்ணதாசன் | ‛பார்க்கிங்' பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன் | ஜெயம் ரவி 34வது படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் | 4வது திருமணம் செய்த நடிகர் பாலா: முறைப்பெண்ணை மணந்தார் |
அம்மா அப்பா செல்லம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலா. இவர் இயக்குனர் சிவாவின் சகோதரர். அவர் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த வீரம், ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படங்களிலும் பாலா நடித்திருந்தார். பல வருடங்களாக மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி சர்ச்சையான விஷயங்களிலும் சிக்கி தவித்து வருகிறார்.
இவர், பின்னணி பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து 2010ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை 2016ல் விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு அவந்திகா என்கிற பெண் குழந்தை இருக்கிறது. அடுத்ததாக 2021ல் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்தார். இவருடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
அதுமட்டுமல்லாமல், இவர் அம்ருதா சுரேஷை திருமணம் செய்வதற்கு முன்பாகவே கடந்த 2008ல் கர்நாடகாவை சேர்ந்த சந்தனா சதாசிவா என்பவரை திருமணம் செய்திருந்தார் என்கிற திருமண சான்றிதழ் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திருமணத்தை மறைத்து தன்னை திருமணம் செய்ததாக அம்ருதா சுரேசும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் பாலா, அவரது முறைப்பெண்ணான கோகிலா என்பவரை இன்று எர்ணாகுளம், கலூர் பாவகுளம் கோவிலில் திருமணம் செய்துள்ளார். இது பாலாவின் 4வது திருமணமாகும். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கோகிலாவுக்கு அவரது பிறந்த நாளன்று தான் கேக் ஊட்டி விட்ட வீடியோவையும் பிரியாணி ஊட்டிவிட்ட வீடியோவையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார் பாலா.