நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! |
மர்ம தேசம், ருத்ரவீணை, சிதம்பர ரகசியம் உள்ளிட்ட தொடர்கள், அனந்தபுரத்து வீடு என்ற படம் மூலம் புகழ்பெற்ற நாகா இயக்கி உள்ள வெப் தொடர் 'ஐந்தாம் வேதம்'. அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்துள்ள இந்த மித்தாலஜி தொடரில், சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த வெப்சீரிஸ் ஜீ 5 தளத்தில் வருகிற 25ம் தேதி வெளியாகிறது.
நான்கு வேதங்கள் இருக்கிறது. 5வது வேதம் ஒன்று இருக்கிறது. அது சிவன் கோவில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் அது வெளிவரும் என்கிற ஒரு கதை உண்டு. அதை மையப்படுத்தி 5ம் வேதத்தை பலர் தேடிச் செல்வது மாதிரியான கதை. 5ம் வேதத்திற்கும் இன்றைய ஏஐ தொழில்நுட்பத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு என்பது மாதிரியான விஷயத்தை சேர்த்து சொல்லும் தொடர்.
இந்த வெப் தொடரின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு சாய் தன்ஷிகா பேசியதாவது : எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால் எல்லாருமே எங்க போனாலும் என்னை கேட்டது என்ன நீங்க தமிழ் மறந்துட்டீங்களா? தமிழ்ல படம் பண்ணலையா? என்றுதான். அப்போதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனால் பண்ணினா மனசுக்கு திருப்தியான படம் மட்டும்தான் பண்ண வேண்டும் என்று மனசுக்குள்ள எப்பவுமே ஓடிக்கிட்டே இருக்கும். அந்த காத்திருப்பால்தான், அற்புதமான டீமோட வந்தது நான் நிக்கிறேன். நாலு வேதம் இருப்பது தெரியும், ஐந்தாவது வேதம் இருந்தால் எப்படி இருக்கும் அதுக்குள்ள எவ்வளவு விஷயங்கள் இருக்கும் என்பதுதான் இந்த தொடரின் கதை.
எல்லா கால கட்டத்துலேயும் நம்மை ஊக்கப்படுத்த வழிகாட்ட ஒருவர் வேண்டும். எனக்கு அப்படி நிறைய இயக்குனர்கள் கிடைத்தார்கள், அப்போது ஜனநாதன் சார், இப்போது நாகா சார். இந்த தொடரில் புராண கதையும் இருக்கிறது, நவீன விஞ்ஞான வளர்ச்சியான ஏஐ தொழில்நுட்பம் பற்றியும் இருக்கு. நிச்சயமாக இது எல்லோருக்கும் பிடித்த தொடராக இருக்கும். நீண்ட நாட்கள் நிறைய கஷ்டப்பட்டு உருவான தொடர் இது. எங்கள் உழைப்பு நிச்சயம் பேசப்படும். என்றார்.