Advertisement

சிறப்புச்செய்திகள்

பிச்சைக்காரனாக நடிக்க நிஜமாகவே பிச்சை எடுத்த கவின் | மோசடி நிறுவனத்துடன் தொடர்பா? - தமன்னாவிடம் அமலாக்கத்துறை திடீர் விசாரணை | நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்: ராமநாதபுரத்தில் கவுதமி முழக்கம் | பிளாஷ்பேக் : 52 ஆயிரத்தில் பாகவதர் தயாரித்த படம் | சின்னத்திரை நடிகை இந்திய அழகியாக தேர்வு | 212 நாட்கள் நடைபெற்று முடிந்த ஜெயசூர்யாவின் கத்தனார் படப்பிடிப்பு | நடனம் ஆடுவதற்கு பயந்து காலை ஒடித்துக்கொள்ள நினைத்த ஜோதிர்மயி | அப்பாவின் படத்தையே மகனுக்கு சுட்டுக்கொடுத்த வெங்கட் பிரபு : அவரே வெளியிட்ட தகவல் | குருவாயூர் அம்பல நடையில் இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த பிரித்விராஜ் | புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஓய்வெடுக்க செல்லும் மஞ்சும்மேல் பாய்ஸ் இசையமைப்பாளர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்: ராமநாதபுரத்தில் கவுதமி முழக்கம்

18 அக், 2024 - 01:42 IST
எழுத்தின் அளவு:
I-will-fight-till-I-get-justice:-Gauthami-slogan-in-Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே நடிகை கவுதமிக்கு, 150 ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாக 3.16 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கில் காரைக்குடியைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பனும், அவரது உதவியாளர் ரமேஷ் சங்கரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அழகப்பனின் உதவியாளர் ரமேஷ் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று ராமநாதபுரம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதமி நேரில் ஆஜரானார். ரமேஷ் சங்கர் இந்த மோசடியில் முக்கிய நபராக உள்ளதாலும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை கலைத்து விடுவார் என்றும் கூறி ஜாமீன் வழங்கக்கூடாது என கவுதமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு நடந்த அநீதியை எதிர்த்து நியாயத்திற்காக போராடி வருகிறேன். எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். நியாயத்திற்காக என்னுடன் துணையாக நிற்கின்றனர். அதற்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என விசாரித்தபோது பல விஷயங்கள் நடந்திருப்பது எனது கவனத்திற்கு வந்தது. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : 52 ஆயிரத்தில் பாகவதர் தயாரித்த படம்பிளாஷ்பேக் : 52 ஆயிரத்தில் பாகவதர் ... மோசடி நிறுவனத்துடன் தொடர்பா? - தமன்னாவிடம் அமலாக்கத்துறை திடீர் விசாரணை மோசடி நிறுவனத்துடன் தொடர்பா? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in