லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் |

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே நடிகை கவுதமிக்கு, 150 ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாக 3.16 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கில் காரைக்குடியைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பனும், அவரது உதவியாளர் ரமேஷ் சங்கரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அழகப்பனின் உதவியாளர் ரமேஷ் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று ராமநாதபுரம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதமி நேரில் ஆஜரானார். ரமேஷ் சங்கர் இந்த மோசடியில் முக்கிய நபராக உள்ளதாலும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை கலைத்து விடுவார் என்றும் கூறி ஜாமீன் வழங்கக்கூடாது என கவுதமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு நடந்த அநீதியை எதிர்த்து நியாயத்திற்காக போராடி வருகிறேன். எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். நியாயத்திற்காக என்னுடன் துணையாக நிற்கின்றனர். அதற்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என விசாரித்தபோது பல விஷயங்கள் நடந்திருப்பது எனது கவனத்திற்கு வந்தது. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.




