'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலுமகேந்திரா இயக்கிய 'மூடுபனி'தான் சைக்கோ திரில்லர் படத்தின் முதல் வழிகாட்டி. இதில் பிரதாப் சைக்கோ திரில்லராக நடித்திருந்தார். ஷோபா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம்தான் பாலுமகேந்திரா&இளையராஜா ஜோடி உருவானது. அதன்பிறகு பாலுமகேந்திரா தான் இயக்கிய படங்கள் அனைத்துக்கும் இளையராஜாவையே இசை அமைக்க வைத்தார். 'சந்தியாராகம்' படத்திற்கு மட்டும் எல்.வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார்.
'அன்னக்கிளி'யில் அறிமுகமான இளையராஜாவுக்கு இந்தப் படம் 100வது படம். நான்கே ஆண்டுகளில் 100 படங்களை தொட்டிருந்தார் இளையராஜா. இந்த படத்தின் இசை அமைப்பின்போதுதான் திலீப் என்கிற சிறுவன் இளையராஜா குரூப்பில் கீ போர்டு பிளேயராக பணியில் சேர்ந்தார். அவர்தான் பிற்காலத்தில் ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிய ஏ.ஆர்.ரஹ்மான். அதேபோல குறுகிய காலத்தில், 17 வயதிற்குள் தேசிய விருது உயரத்தையும் அடைந்த ஷோபாவுக்கு இது கடைசி படமாக அமைந்தது.