பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பாலுமகேந்திரா இயக்கிய 'மூடுபனி'தான் சைக்கோ திரில்லர் படத்தின் முதல் வழிகாட்டி. இதில் பிரதாப் சைக்கோ திரில்லராக நடித்திருந்தார். ஷோபா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம்தான் பாலுமகேந்திரா&இளையராஜா ஜோடி உருவானது. அதன்பிறகு பாலுமகேந்திரா தான் இயக்கிய படங்கள் அனைத்துக்கும் இளையராஜாவையே இசை அமைக்க வைத்தார். 'சந்தியாராகம்' படத்திற்கு மட்டும் எல்.வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார்.
'அன்னக்கிளி'யில் அறிமுகமான இளையராஜாவுக்கு இந்தப் படம் 100வது படம். நான்கே ஆண்டுகளில் 100 படங்களை தொட்டிருந்தார் இளையராஜா. இந்த படத்தின் இசை அமைப்பின்போதுதான் திலீப் என்கிற சிறுவன் இளையராஜா குரூப்பில் கீ போர்டு பிளேயராக பணியில் சேர்ந்தார். அவர்தான் பிற்காலத்தில் ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிய ஏ.ஆர்.ரஹ்மான். அதேபோல குறுகிய காலத்தில், 17 வயதிற்குள் தேசிய விருது உயரத்தையும் அடைந்த ஷோபாவுக்கு இது கடைசி படமாக அமைந்தது.




