நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
சுமார் 1500 பாடலுக்கு மேல் பின்னணி பாடியவர் சுசித்ரா. இவர் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதால் அவர் மீது காவல்துறையிலும் புகார்கள் அளிக்கப்பட்டது. அதோடு தனது முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் மீதும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டார். அதையடுத்து அவர் சுசித்ரா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இப்படியான நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார் சுசித்ரா. அதில் தான் மும்பையில் நிரந்தரமாக செட்டிலாக போவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு அங்கு சென்று குழந்தைகளுக்கான மாத இதழ் ஒன்றில் பணியாற்ற போகிறேன். இது என்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் தெரிவித்திருக்கும் பாடகி சுசித்ரா, இனிமேல் சோசியல் மீடியாவில் எந்த வீடியோவும் வெளியிட மாட்டேன் என்றும் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.