மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சுமார் 1500 பாடலுக்கு மேல் பின்னணி பாடியவர் சுசித்ரா. இவர் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதால் அவர் மீது காவல்துறையிலும் புகார்கள் அளிக்கப்பட்டது. அதோடு தனது முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் மீதும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டார். அதையடுத்து அவர் சுசித்ரா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இப்படியான நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார் சுசித்ரா. அதில் தான் மும்பையில் நிரந்தரமாக செட்டிலாக போவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு அங்கு சென்று குழந்தைகளுக்கான மாத இதழ் ஒன்றில் பணியாற்ற போகிறேன். இது என்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் தெரிவித்திருக்கும் பாடகி சுசித்ரா, இனிமேல் சோசியல் மீடியாவில் எந்த வீடியோவும் வெளியிட மாட்டேன் என்றும் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.