கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

சுமார் 1500 பாடலுக்கு மேல் பின்னணி பாடியவர் சுசித்ரா. இவர் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதால் அவர் மீது காவல்துறையிலும் புகார்கள் அளிக்கப்பட்டது. அதோடு தனது முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் மீதும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டார். அதையடுத்து அவர் சுசித்ரா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இப்படியான நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார் சுசித்ரா. அதில் தான் மும்பையில் நிரந்தரமாக செட்டிலாக போவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு அங்கு சென்று குழந்தைகளுக்கான மாத இதழ் ஒன்றில் பணியாற்ற போகிறேன். இது என்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் தெரிவித்திருக்கும் பாடகி சுசித்ரா, இனிமேல் சோசியல் மீடியாவில் எந்த வீடியோவும் வெளியிட மாட்டேன் என்றும் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.




