Advertisement

சிறப்புச்செய்திகள்

விவாகரத்தில் உடன்பாடில்லை... பேச தயார் : ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை | பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு கருத்து: இயக்குனர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு | அக்டோபர் 2ல் வெளியாகிறது 'வேட்டையன்' டிரைலர் | ''என்னை பேயாக பார்க்கணுமா?'': ரசிகரிடம் மறுகேள்வி கேட்ட மாளவிகா மோகனன் | தெலுங்கில் ரீமேக் ஆகும் கருடன்! | பிளாஷ்பேக்: ஆண்டுகள் 60 ஆனாலும் என்றும் 20 ஆக காட்சி தரும் “காதலிக்க நேரமில்லை” படத்தில் இத்தனை சுவாரஸ்யங்களா? | பிளாஷ்பேக்: குங்குமப் பொட்டின் மங்கலத்தை எடுத்துரைத்த இஸ்லாமிய பெண் பாடலாசிரியர் ரோஷனாரா பேகம் | புதிய தோற்றத்திற்கு மாறிய சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக் : சீர்திருத்த திருமணத்தை பேசிய படம் | அவமானங்களை தாங்கித்தான் டைட்டில் வென்றேன்: 'பருத்திவீரன்' சுஜாதா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு கருத்து: இயக்குனர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு

30 செப், 2024 - 05:44 IST
எழுத்தின் அளவு:
Slanderous-comment-on-Palani-Panchamirtham:-Director-Mohan-ordered-to-apologise


'பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ரதாண்டவம், திரவுபதி, பகாசூரன்' ஆகிய படங்களை இயக்கியவர் மோகன். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். சமீபத்தில், பழநி கோவிலில் வினியோகம் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலந்து கொடுப்பதாக கூறி சர்ச்சையே ஏற்படுத்தியிருந்தார். இது பற்றி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, மோகன் கைதுக்கு முகாந்திரம் உள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் எனக்கூறி ஜாமின் வழங்கியது.

இந்த நிலையில் இன்று (செப்.,30) நடைபெற்ற ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, அப்போது, ''பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய விவகாரத்தில் திரைப்பட இயக்குனர் மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும். அவதூறாக கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் தமிழகம் முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும். பழநி போலீஸ் ஸ்டேஷனில் 3 வாரங்களுக்கு தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கும் முன் உறுதிப்படுத்தாமல் கூறக் கூடாது. இயக்குனர் மோகன், பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்கு சென்று 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம். உண்மையிலேயே பழநி கோயில் மீது அக்கறை இருந்தால் அங்கு சென்று தூய்மை பணி மேற்கொள்ளலாம்'' என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அக்டோபர் 2ல் வெளியாகிறது 'வேட்டையன்' டிரைலர்அக்டோபர் 2ல் வெளியாகிறது ... விவாகரத்தில் உடன்பாடில்லை... பேச தயார் : ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை விவாகரத்தில் உடன்பாடில்லை... பேச ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in