நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! |
'பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ரதாண்டவம், திரவுபதி, பகாசூரன்' ஆகிய படங்களை இயக்கியவர் மோகன். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். சமீபத்தில், பழநி கோவிலில் வினியோகம் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலந்து கொடுப்பதாக கூறி சர்ச்சையே ஏற்படுத்தியிருந்தார். இது பற்றி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, மோகன் கைதுக்கு முகாந்திரம் உள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் எனக்கூறி ஜாமின் வழங்கியது.
இந்த நிலையில் இன்று (செப்.,30) நடைபெற்ற ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, அப்போது, ''பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய விவகாரத்தில் திரைப்பட இயக்குனர் மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும். அவதூறாக கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் தமிழகம் முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும். பழநி போலீஸ் ஸ்டேஷனில் 3 வாரங்களுக்கு தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கும் முன் உறுதிப்படுத்தாமல் கூறக் கூடாது. இயக்குனர் மோகன், பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்கு சென்று 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம். உண்மையிலேயே பழநி கோயில் மீது அக்கறை இருந்தால் அங்கு சென்று தூய்மை பணி மேற்கொள்ளலாம்'' என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.