நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
கவுண்டமணி செந்தில் ஜோடி மற்றும் வடிவேலுவின் வெற்றியே அவர்களது காமெடி கிராமங்களை பின்னணியாக கொண்டதுதான். தமிழ் சினிமாவில் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் தம்பதிகள் காமெடி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு எதிர் களத்தில் நின்று கிராமத்து காமெடிகளால் கவனம் ஈர்த்தவர் காளி என்.ரத்னம். என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம் ஜோடி போன்று காளி என்.ரத்னம் - ராஜகாந்தம் ஜோடியும் காமெடியில் சாதித்தனர்.
காளி என்.ரத்னம், 1897ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள மலையப்ப நல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தார். 5ம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர். 12 வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் பெண் வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். 'கோவலன்' என்ற நாடகத்தில் அவர் காளி வேடத்தில் நடித்து புகழ்பெற்றதால் வெறும் ரத்னமாக இருந்தவர் காளி. என்.ரத்னம் ஆனார்.
பதிபக்தி, ராஜமோகன், மாத்ரு பூமி, சபாபதி, மனோன்மணி, திவான் பகதூர், பர்மா ராணி, சூரிய புத்ரி, சிவலிங்க சாட்சி, நாடக மேடை, பிருதிவி ராஜன், போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள். 14 வருடங்கள் சினிமாவில் நடித்தவர் 1950ம் ஆண்டு காலமானார்.