அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து மோதல் ஏற்பட்டு விவாகரத்து செய்வதற்கு நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் ஜெயம் ரவி. பாடகி கெனிஷா உடன் ஜெயம் ரவிக்கு தவறான உறவு இருப்பதாக அவரது மனைவி ஆர்த்தி சந்தேகப்படுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்ததை அடுத்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அதற்கு விளக்கம் கொடுத்தார் ஜெயம் ரவி.
இந்த நிலையில் தற்போது பாடகி கெனிஷாவும் சோசியல் மீடியாவில் அது குறித்த ஒரு விளக்கம் அளித்து இருக்கிறார். அந்த பதிவில், ''ஜெயம் ரவி இடத்தில் நாகரீகம் அற்ற கேள்விகளை கேட்டுள்ளீர்கள். ஆனபோதும் அவர் அதற்கு சரியான பதில் கொடுத்து இருக்கிறார். அதனால் இனிமேலாவது உங்கள் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். காரணம் உங்கள் மனதில் இருக்கும் காயத்திற்கு எதிரி வேறு யாரும் இல்லை நீங்களேதான். உண்மை தெரியாமல் தேவையில்லாத கற்பனைகளில் மிதந்து மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். அவரவர் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ விடுங்கள். தயவு செய்து கருணையுடன் இருங்கள். உண்மை என்னவென்று தெரியாமல் யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம்,'' என்று கூறியிருக்கிறார் பாடகி கெனிஷா.