படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
பிக்பாஸ் சீசன் 8க்கான வேலைகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால் மக்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் முன்னாள் போட்டியாளரான இயக்குனர் பி வாசுவின் மகனான நடிகர் சக்தி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'நான் வாழ்க்கையில் எதிலுமே தோற்றது கிடையாது. சினிமாவிற்கு வந்த பிறகு தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறேன். அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது தான் நான் வாழ்க்கையிலேயே செய்த மிகப்பெரிய தவறு. அப்பா போக வேண்டாம் என்று சொன்னார். நான் பிடிவாதமாக போனேன். நான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்த பிறகு பல பிரச்னைகளை சந்தித்தேன். அதனால் பல நாட்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்தேன்' என்று கூறியுள்ளார்.