அண்ணன், தம்பியுடன் மீண்டும் கூட்டணியில் ஜிவி பிரகாஷ் | பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் | அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் |
தமிழ் சினிமா உலகத்தை விடவும் தெலுங்கு சினிமா நிறையவே வளர்ந்துவிட்டது. கன்னட சினிமா போட்டி போட்டு மேலே வந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் சில தரமான படங்கள் எப்போதும் போல வந்து தமிழ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி ஹீரோக்கள் சிலர் அடுத்தடுத்து மற்ற மொழித் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க சம்மதித்துள்ளது இங்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் திரையுலகிலும் சில முக்கிய தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களது படங்களில் நடிக்க விருப்பமில்லாமல், இப்படி மற்ற மொழித் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பது சரியா என சில சீனியர் தயாரிப்பாளர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
விஜய்யின் கடைசி படமாக உருவாக உள்ள அவரது 69வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல கன்னட படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தை தெலுங்கு படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தனுஷ் நடித்து வரும் 'குபேரா' படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் தயாரித்து வருகிறது.
மற்ற மொழி நிறுவனங்கள் தமிழ்ப் படங்களை எடுக்க வந்தாலும் பெரும்பாலும் படப்பிடிப்புகளை அவர்களது மாநிலங்களில் நடத்தவே விரும்புகிறார்களாம். இதனால், இங்குள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பது குறைகிறது என சினிமா தொழிலாளர்கள் கவலை கொள்கிறார்கள்.
மற்ற மொழி தயாரிப்பாளர்கள் அதிக சம்பளத்தைத் தருவதால்தான் இங்குள்ள டாப் ஹீரோக்கள் இப்படி செய்கிறார்கள் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.