மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
சினிமாவில் வாய்ப்புக்காக யாராவது அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னால் அவர்களை செருப்பால் அடிங்கள் என நடிகர் விஷால் தெரிவித்தார். மேலும் நடிகை ஸ்ரீ ரெட்டி குறித்த கேள்விக்கு அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார். அதையடுத்து என்னிடத்தில் பல செருப்புகள் உள்ளன என்று விஷாலை மறைமுகமாக தாக்கி ஒரு பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி.
இந்த நிலையில் அவர் எக்ஸ் பக்கத்தில் இன்னொரு பதிவு போட்டுள்ளார். அதில், ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் நரிகளின் கதை உள்ளது. பெண்கள் அந்த நரிகளுக்கு விருந்தளித்து உணவளிக்க வேண்டும். ஒரு ஆணை விட பெண்கள் அதிகமான உழைப்பை கொடுத்தாலும் விருந்துகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பெண்கள் கஷ்டப்பட்டு தங்கள் இலக்கை அடைவதற்கு சில ஆண்கள் முதுகெலும்பாகவும், பல ஆண்கள் நரிகளாகவும் மாறுகிறார்கள். ஆண் எப்போதுமே ஒரு ஆண். அவன் மட்டுமே சரியானவன் என்று துரதிஷ்டவசமாக சில பெண்களும் இதை ஆதரிக்கிறார்கள். என்ன பரிதாபமான உலகம் இது என்று தெரிவித்திருக்கிறார்.