சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
சினிமாவில் வாய்ப்புக்காக யாராவது அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னால் அவர்களை செருப்பால் அடிங்கள் என நடிகர் விஷால் தெரிவித்தார். மேலும் நடிகை ஸ்ரீ ரெட்டி குறித்த கேள்விக்கு அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார். அதையடுத்து என்னிடத்தில் பல செருப்புகள் உள்ளன என்று விஷாலை மறைமுகமாக தாக்கி ஒரு பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி.
இந்த நிலையில் அவர் எக்ஸ் பக்கத்தில் இன்னொரு பதிவு போட்டுள்ளார். அதில், ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் நரிகளின் கதை உள்ளது. பெண்கள் அந்த நரிகளுக்கு விருந்தளித்து உணவளிக்க வேண்டும். ஒரு ஆணை விட பெண்கள் அதிகமான உழைப்பை கொடுத்தாலும் விருந்துகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பெண்கள் கஷ்டப்பட்டு தங்கள் இலக்கை அடைவதற்கு சில ஆண்கள் முதுகெலும்பாகவும், பல ஆண்கள் நரிகளாகவும் மாறுகிறார்கள். ஆண் எப்போதுமே ஒரு ஆண். அவன் மட்டுமே சரியானவன் என்று துரதிஷ்டவசமாக சில பெண்களும் இதை ஆதரிக்கிறார்கள். என்ன பரிதாபமான உலகம் இது என்று தெரிவித்திருக்கிறார்.