100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம் | இப்பவும் கதை கேட்கும்போது துாங்குறீங்களா? : அஸ்வின் சொன்ன பதில் | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி | 'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ? | 'ஜனநாயகன்' வழக்கு விவகாரம் : அடுத்து என்ன நடக்கலாம்? | மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் சில தெலுங்குப் படங்களும், ஹிந்தியில் பான் இந்தியா படமான 'சாவா' படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், அன்றைய தினம் 'புஷ்பா 2' வெளியாக வாய்ப்பில்லை, எனவேதான் மற்ற படங்களின் அறிவிப்பு வெளியாகி வருகிறது என்று டோலிவுட்டில் சொன்னார்கள்.
இதனிடையே, 'மாருதி நகர் சுப்பிரமணியம்' என்ற படத்தின் நிகழ்ச்சியில் இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜூன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சுகுமார், “ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நாங்கள் இடைவிடாமல் உழைத்து வருகிறோம். சில காட்சிகளை எடுக்க அதிக நேரமாகிறது. அதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை, அதனால்தான் தாமதம் ஏற்படுகிறது. அல்லு அர்ஜூனின் நடிப்பும், படமும் சிறப்பாக இருக்கும்” என்று பேசியுள்ளார். மேலும், படம் திட்டமிட்டபடி டிசம்பர் 6ம் தேதி வெளியாகும், வெளிவரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.




