7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் சில தெலுங்குப் படங்களும், ஹிந்தியில் பான் இந்தியா படமான 'சாவா' படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், அன்றைய தினம் 'புஷ்பா 2' வெளியாக வாய்ப்பில்லை, எனவேதான் மற்ற படங்களின் அறிவிப்பு வெளியாகி வருகிறது என்று டோலிவுட்டில் சொன்னார்கள்.
இதனிடையே, 'மாருதி நகர் சுப்பிரமணியம்' என்ற படத்தின் நிகழ்ச்சியில் இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜூன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சுகுமார், “ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நாங்கள் இடைவிடாமல் உழைத்து வருகிறோம். சில காட்சிகளை எடுக்க அதிக நேரமாகிறது. அதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை, அதனால்தான் தாமதம் ஏற்படுகிறது. அல்லு அர்ஜூனின் நடிப்பும், படமும் சிறப்பாக இருக்கும்” என்று பேசியுள்ளார். மேலும், படம் திட்டமிட்டபடி டிசம்பர் 6ம் தேதி வெளியாகும், வெளிவரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.