ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛தங்கலான்'. கோலார் தங்க வயல் பின்னணியில் இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. ரஞ்சித் படம் என்றாலே அதில் ஏதாவது ஒரு சர்ச்சை எழும். அந்தவகையில் இந்த படத்திலும் சர்ச்சை இருப்பதாக கூறி ரஞ்சித் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல் பொற்கொடி என்பவர் புகார் அளித்துள்ளார்.
அதில், தங்கலான் படத்தில் புத்த மதத்தை உயர்வாக காட்ட, வைணவ மதத்தை இழிவுப்படுத்தும் விதமான காட்சிகள் இருப்பதாகவும், அதை படத்திலிருந்து நீக்க வேண்டும் என கூறி ரஞ்சித் மீது புகார் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடருவேன் என குறிப்பிட்டுள்ளார்.




