பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
தெலுங்கு திரையுலகில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டவர் நடிகை ஸ்ரீ லீலா. மகேஷ் பாபு நடிப்பில் இந்த வருடம் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ராபின்ஹூட், உஸ்தாத் பகத்சிங் மற்றும் ரவி தேஜாவின் 75வது படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீ லீலா. இந்த நிலையில் சிரஞ்சீவி தற்போது நடித்து வரும் விஸ்வம்பரா படத்தில் நடிக்க ஸ்ரீ லீலாவுக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மல்லிடி வசிஷ்டா என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஏற்கனவே நடிகை திரிஷா இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் முக்கியமான ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடுவதற்காக தான் ஸ்ரீ லீலாவை அணுகினார்கள் என்றும் இதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகையை தருவதற்கும் தயாராக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் வளர்ந்து வரும் இந்த சூழலில் இப்படி ஒரு பாடலுக்கு ஆடினால் தனது திரையுலக பயணத்தில் பாதிப்பு ஏற்படும் என கருதியதால் இந்த வாய்ப்பை ஏற்க ஸ்ரீ லீலா மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.