'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் | பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை-2 கைவிடப்பட்டதா? | திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா! | நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் வீட்டில் குடியேறும் ஷாருக்கான்! | 'குட் பேட் அக்லி' படத்தின் மையக்கரு இதுதான்! - ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | சித்தார்த் - கியாரா திருமணத்தால் பல நாட்கள் அழுதேன் ; கிச்சா சுதீப் மகள் புது தகவல் | சல்மான்கான் குடும்பத்தினருடன் 'சிக்கந்தர்' படம் பார்த்த ஏ.ஆர் முருகதாஸ் | 'மிராஜ்' படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜீத்து ஜோசப் | மோகன்லால் அறிமுக காட்சியே ரஜினியை மனதில் வைத்து உருவாக்கியதுதான் ; பிரித்விராஜ் | 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் மனிஷா ஜஷ்னானி |
புன்னகையில் பூத்த பூவிதழ், கண்களின் இரு விழியாலும், கன்னத்தில் விழும் சிறு குழியாலும் அழகிற்கே கூடுதல் அழகு சேர்க்கும் பதுமை. 'ரசவாதி' திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை வென்ற ரேஷ்மா வெங்கடேஷ் நம்முடன் பகிர்ந்தது.
சொந்த ஊர் கேரளா மாநிலம். வளர்ந்தது படிச்சது ஊட்டி. பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்த செல்ல மகள். ஊட்டி கல்லுாரியில் பி.காம்., முடித்து பணிக்காக சென்னைக்கு வந்து தற்போது சென்னை வாசியாக மாறிவிட்டேன்.
சென்னைக்கு வந்து செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தேன். பின் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணி செய்தேன். அதில் கிடைத்த அனுபவம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற உதவியாக இருந்தது. கிடைத்த வாய்ப்புகளில் முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறேன்.
'மதுரை பையன், சென்னை பொண்ணு' வெப் சீரிஸில் கதாநாயகியாக நடித்தேன். அந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சினிமாவில் நடிக்க பல முறை தேர்வாகி வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஆனால் தொடர் முயற்சி செய்து தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.
'ரசவாதி' படத்தின் மூலம் அர்ஜீன் தாஸ், சுஜித் சங்கர் ஆகிய நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர். இவர்களுடன் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. சுஜித்துடன் நடித்த போது சற்று அச்சத்துடன் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் இயக்குனர் சாந்த குமார் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றியது எனக்கு மகிழ்ச்சி.
எனக்கு பரதநாட்டியம் தெரியாது. ஆனால் படத்தில் வரும் பாடலில் பரதநாட்டியம் இருந்தது. அதற்காக படத்தின் பாடலையே போட்டு பயிற்சி எடுத்து போது அது தான் பாடல் என்பது எனக்கு தெரியாது. பாடல்வரிகள் இல்லாமல் கதாபாத்திரம், காதலர்கள் குறித்து 'தாய் தாய்'பாடல் எளிதாக எடுத்துரைக்கிறது.
சாலா, சுடரி உட்பட மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். ரசவாதி எனது நான்காவது படம். ஆனால் 'ரசவாதி' முதலில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆக. 23ல் 'சாலா' திரைப்படம் வெளியாகிறது. இந்த ஆண்டிலேயே நான்கு திரைப்படங்களும் வெளிவரும்.
ரசவாதி படத்திற்கு பின்பு உடல் எடையில் 10 கிலோ குறைத்துள்ளேன். நடைப்பயிற்சி, உணவு கட்டுபாட்டை கடைபிடித்து வருகிறேன்.
'மவுன ராகம்' போன்ற காதல் கதையில் கதாநாயகியாக நடிக்க வேண்டும். தற்போது வரை கதையை கேட்டு அழுத்தமான கதாபாத்திரம் இருப்பதை உறுதி செய்த பின்னரே நடித்து வருகிறேன்.
பெற்றோரின் ஆதரவோடு முழு திறமையை வெளிப்படுத்தினால் சினிமா மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்கள் வெல்ல முடியும்.