பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
தமிழ் சினிமாவில் எனக்குள் ஒருவன் என்ற படத்தின் மூலம் பாடலாசிரியர் ஆனவர் விவேக். அதையடுத்து 36 வயதினிலே, இன்று நேற்று நாளை என பல படங்களுக்கு பாடல் எழுதியவர், அட்லி இயக்கிய மெர்சல் படத்தின் மூலம் முதன்முதலாக விஜய்க்காக பாடல் எழுதினார். அதில், ‛ஆளப்போறான் தமிழன்' என்ற பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதையடுத்து தொடர்ந்து விஜய் நடித்த சர்க்கார், பிகில், பீஸ்ட், வாரிசு படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார் விவேக்.
இந்நிலையில் விவேக்கின் மனைவிக்கு சென்னையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டு வாழ்த்தினார். அவர் மட்டுமின்றி இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள்.