பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
நடிகர் வடிவேலு நடித்த, 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' வாயிலாக, 'கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க...' என்று, பல ஆண்டுகளுக்கு முன் அழைத்தவர் சிம்புதேவன்.
திரைப்படத்தை பார்த்தவர்கள் எல்லாம், சிரித்து உருண்டனர். இதற்கு பிறகு, அறை எண் 305ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், புலி என, வேறு பாதையில் பயணிக்க துவங்கினார்.
இவரது சமீபத்திய 'போட்' பயணம், மகிழ்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அந்த மகிழ்ச்சியோடு, கோவையில் ஒரு கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், இவரும், படத்தில் நடித்த சிலரும் பங்கேற்றனர்.
''கடலில் படம் பிடிப்பது, ஒரு சவாலான காரியம் தான். பத்து பேர் பயணிக்கக் கூடிய சிறிய படகில் கதை நடக்கிறது. படக்குழுவினர் மற்றொரு படகில் இணையாக நிறுத்தப்பட்டனர். கேமராவை எப்படி அமைத்தாலும், அது அசைந்து கொண்டே இருக்கும். அதற்கு மேல், எங்கள் யாருக்கும் நீச்சல் தெரியாது. இதையெல்லாம் தாண்டி, மறக்க முடியாத அனுபவமாக படம் அமைந்திருக்கிறது,'' என்று பேசினார் சிம்புதேவன்.
நடிகை கவுரி கிஷன் பேசுகையில், '' நான் நடித்த '96' படத்துக்கு பின், நிறைய வித்தியாசமான படங்கள் அமைகின்றன. இப்படம், அனைவருக்கும் பிடிக்கும்,'' என்றார்.