தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் சேத்தன். ஏராளமான படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான 'விடுதலை' படத்தில் அவர் நடித்த நெகட்டிவான போலீஸ் அதிகாரி கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது. விடுதலை இரண்டாம் பாகத்திலும் அந்த கேரக்டர் தொடர்கிறது. இந்த நிலையில 'ஜமா' என்ற படத்தில் அதுபோன்ற ஒரு முக்கியமாக கேரக்டரில், அதாவது மூத்த தெருக்கூத்து கலைஞர் வேடத்தில் நடித்துள்ளார். படம் வருகிற 2ம் தேதி வெளிவருகிறது.
இதுகுறித்து அவர் கூறியதாவது : கிரைம், த்ரில்லர் அல்லது மேற்கத்திய கருப்பொருளை கதைக்களமாகத் தேர்ந்தெடுப்பது பல புது இயக்குநர்களின் பொதுவான நடைமுறையாகிவிட்டது. நமது கலாச்சாரத்தின் நெறிமுறை அழகியலை கதையாக்கிய இந்த படத்தின் இயக்குனர் பாரியின் துணிச்சலான முடிவு தனித்துவமானது. விடுதலைப் படத்திற்குப் பிறகு, 'ஜமா' படத்தில் வலுவான கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. திரையரங்குகளில் இருக்கும் ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயத்தையும் தொடும் படம் இது. என்றார்.
இந்த படத்தில் பாரி இளவழகன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.




