கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ஒரு அடார் லவ். புருவ அழகி என அப்போது பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் அறிமுகமானது இந்த படத்தில் தான். ஓமர் லுலு என்பவர் இயக்கி இருந்தார். இந்த நிலையில் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறி சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் ஓமர் லுலு மீது போலீசில் புகார் அளித்தார். அதே சமயம் அந்தப்பெண்ணும் தானும் பரஸ்பரம் விருப்பத்தின் பேரில் உறவில் இருந்ததாக கூறிய ஓமர் லுலு தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. அதே சமயம் புகார் அளித்த அந்தப்பெண், புகார் குறித்து முக்கியமான சில ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் இயக்குனர் ஓமர் லுலுவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் அந்த ஆதாரங்களை சேதப்படுத்தி விடக்கூடும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி விசாரிப்பதாக கூறி ஒத்தி வைத்துள்ளது.