Advertisement

சிறப்புச்செய்திகள்

''மதம் மாற்ற முயற்சி பண்ணாதீங்க..'': பரபரப்பு வசனங்களுடன் 'பரமசிவன் பாத்திமா' டிரைலர் | மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்கம் உதவுங்க... கண்ணீர் மல்க மடிப்பிச்சை கேட்கும் காமெடி நடிகை வாசுகி

17 ஜூலை, 2024 - 06:54 IST
எழுத்தின் அளவு:
Actor-Sangam-help...comedy-actress-Vasuki-asking-for-tears

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் உடன் இணைந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் வாசுகி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100 படங்கள் வரை நடித்துள்ளார். அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக.,வில் அவர் ஓரங்கட்டப்பட்டார். சினிமா பட வாய்ப்பும் இல்லாமல், அதிமுக.,விலும் அங்கீகாரம் இல்லாமல் தனது சொந்த ஊரான காரைக்குடிக்கே சென்றுவிட்டார். இந்நிலையில் தான் வறுமையில் வாடுவதாகவும் சாப்பிட்டிற்கே கஷ்டப்படுவதாகவும் கண்கலங்க பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் ‛‛ஜெயலலிதா புகைப்படம் பதித்த பெரிய டாலர் செயின், வைர மூக்குத்தி, காலில் அரை கிலோவுக்கு கொலுசு இதெல்லாம் போட்டிருந்தேன். ஜெயலலிதா இறந்த பிறகு கஷ்டம். அதனால் எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். எனக்கு கர்ப்ப பையில் 3 கட்டி இருந்தது. அதையும் எடுத்துவிட்டார்கள்.

இங்குள்ள நடிகர் சங்கம் செய்யாத உதவியை தெலுங்கு நடிகர் சங்கம் செய்தது. மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு அங்குள்ள நடிகர் சங்கத்தில் அவரே பணம் கட்டி என்னை உறுப்பினராக்கினார். சிரஞ்சீவி, நாகேந்திரபாபு ஆகியோர் பணம் தந்தார்கள். தெலுங்கு மக்களும் பணம் தந்தார்கள். அதை வைத்து கண் ஆபரேஷன் செய்தேன். ரேஷன் கடையில் தரும் அரிசியை வைத்து சாப்பிட்டு வருகிறேன்.

எனக்கு தங்குவதற்கு ஒரு இடமும், வேலையும் கொடுத்தால் போதும் நான் பிழைத்துக் கொள்வேன். தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு ஆந்திராவில் உதவுகிறார்கள். ஆனால் இங்குள்ள நடிகர் சங்கம் எந்த உதவியும் செய்யவில்லை. இப்போது நான் ரோடு ரோடாக திரிகிறேன். நாசர், கார்த்தி, விஷால் ஆகியோருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள், மடிப்பிச்சை கேக்கிறேன்'' என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மெய்யழகன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்புமெய்யழகன் படத்தின் ரிலீஸ் தேதி ... அடுத்தடுத்து அப்டேட்டுகள், வரப் போகும் முக்கிய படங்கள்… அடுத்தடுத்து அப்டேட்டுகள், வரப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in