‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரையுலகில் வந்த சில வருடங்களிலேயே கமல், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்கினார். தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ' கூலி' என்கிற படத்தை இயக்குகிறார்.
கடந்த 2019ம் ஆண்டில் நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி' எனும் படத்தை லோகேஷ் இயக்கிருந்தார். இப்படம் வெளிவந்த சமயத்தில் கைதி 2ம் பாகம் உருவாகும் என அறிவித்தனர். ஆனால், லோகேஷிற்கு தொடர்ந்து உச்ச நடிகர்கள் படம் இயக்குவதில் பிஸியாக இருந்ததால் கைதி 2 உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டது.
இப்போது லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படம் முடிவடைந்த பிறகு 2025ம் வருடத்தில் கைதி 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். மேலும், இப்படத்தில் லோகேஷ் சினிமெட்டிக் யூனிவர்சல் இடம் பெறும் என கூறப்படுகிறது.