திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி | ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" |
சின்னத்திரை நடிகையாக இருந்த ரச்சித மகாலட்சுமி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார். பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் நடிப்பில் பயர் என்ற படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ஆபாச காட்சிகள் அதிகம் நிறைந்த இந்த படத்தை விழிப்புணர்வு படமாக பார்க்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான ஜே.சதீஷ் குமார் கூறியிருந்தார்.
இதற்கிடையில் பயர் படத்தில் நடித்ததற்கு தனக்கு சம்பளமே தரவில்லை என்று பாலாஜி முருகதாஸ் பதிவிட, ரச்சிதாவும் அதை ஆமோதித்து பதிவிட்டிருந்தார். ரச்சிதா தனது பதிவில் பயர் படத்தை ஷிட் என்று கூறியதோடு ஜே.சதீஷ் குமாரையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து அதற்கு தற்போது பதிலளித்த தயாரிப்பாளர், 'நீங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் நடித்துள்ளீர்கள். இலவசமாக நடிக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் அக்ரிமெண்ட் அனைத்தும் உள்ளது. பயர் படத்தில் நீங்களும் நடித்துள்ளீர்கள். இப்போது அதே படத்தை ஷிட் என்று விமர்சனம் செய்கிறீர்கள். அந்த ஷிட்டில் தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்' என்று காத்திரமாக கூறியுள்ளார்.