ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
சின்னத்திரை நடிகையாக இருந்த ரச்சித மகாலட்சுமி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார். பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் நடிப்பில் பயர் என்ற படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ஆபாச காட்சிகள் அதிகம் நிறைந்த இந்த படத்தை விழிப்புணர்வு படமாக பார்க்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான ஜே.சதீஷ் குமார் கூறியிருந்தார்.
இதற்கிடையில் பயர் படத்தில் நடித்ததற்கு தனக்கு சம்பளமே தரவில்லை என்று பாலாஜி முருகதாஸ் பதிவிட, ரச்சிதாவும் அதை ஆமோதித்து பதிவிட்டிருந்தார். ரச்சிதா தனது பதிவில் பயர் படத்தை ஷிட் என்று கூறியதோடு ஜே.சதீஷ் குமாரையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து அதற்கு தற்போது பதிலளித்த தயாரிப்பாளர், 'நீங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் நடித்துள்ளீர்கள். இலவசமாக நடிக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் அக்ரிமெண்ட் அனைத்தும் உள்ளது. பயர் படத்தில் நீங்களும் நடித்துள்ளீர்கள். இப்போது அதே படத்தை ஷிட் என்று விமர்சனம் செய்கிறீர்கள். அந்த ஷிட்டில் தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்' என்று காத்திரமாக கூறியுள்ளார்.