சித்ராவுடன் இணைந்து ஓணம் கொண்டாடிய பின்னனி பாடகிகள் | ரீ ரிலீஸில் 50-வது நாளை தொட்ட மோகன்லாலின் தேவதூதன் | டொவினோ தாமஸ் பட டிரைலரை வியந்து பாராட்டிய பிரசாந்த் நீல் | ஆதாரத்துடன் நிவின்பாலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை | விடுதலை-2 ; தியேட்டரில் பாதி.. ஓடிடியில் மீதி? | வயநாடு நிவாரண பணியில் ஈடுபட்ட வீரர்களை கவுரவித்த மஞ்சு வாரியார்-டொவினோ தாமஸ் | மிஸ்டர் டிடக்ட்டிவ் ஆக மம்மூட்டி? | சத்தமில்லாமல் நடக்கும் ராஜூ முருகன் - சசிகுமார் படப்பிடிப்பு | அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கிய சிவகார்த்திகேயன்! | 'தி கோட்' படத்திற்கு எதிராக இத்தனை சினிமா அரசியலா? |
சின்னத்திரை நடிகையாக இருந்த ரச்சித மகாலட்சுமி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார். பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் நடிப்பில் பயர் என்ற படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ஆபாச காட்சிகள் அதிகம் நிறைந்த இந்த படத்தை விழிப்புணர்வு படமாக பார்க்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான ஜே.சதீஷ் குமார் கூறியிருந்தார்.
இதற்கிடையில் பயர் படத்தில் நடித்ததற்கு தனக்கு சம்பளமே தரவில்லை என்று பாலாஜி முருகதாஸ் பதிவிட, ரச்சிதாவும் அதை ஆமோதித்து பதிவிட்டிருந்தார். ரச்சிதா தனது பதிவில் பயர் படத்தை ஷிட் என்று கூறியதோடு ஜே.சதீஷ் குமாரையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து அதற்கு தற்போது பதிலளித்த தயாரிப்பாளர், 'நீங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் நடித்துள்ளீர்கள். இலவசமாக நடிக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் அக்ரிமெண்ட் அனைத்தும் உள்ளது. பயர் படத்தில் நீங்களும் நடித்துள்ளீர்கள். இப்போது அதே படத்தை ஷிட் என்று விமர்சனம் செய்கிறீர்கள். அந்த ஷிட்டில் தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்' என்று காத்திரமாக கூறியுள்ளார்.