நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
நடிகை ராஷ்மிகா மற்ற முன்னணி நடிகைகளிடமிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டு தெரிபவர். குறிப்பாக பொது இடங்களில் அல்லது சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் தன்னை எந்த இடத்தில் சந்திக்க முற்பட்டாலும் முகம் சுளிக்காது அவர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்வார்.
சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி அவர்களது கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்பவர். கடந்த சில நாட்களாக ராஷ்மிகா, விமான நிலையத்திற்கு வரும்போதெல்லாம் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வந்திருக்கிறார். அப்படி ஒரு புகைப்படத்தை சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டிருந்தார் ராஷ்மிகா. அதேசமயம் ரசிகர்கள் தனது முகத்தை பார்க்கக் கூடாது என்று தவிர்ப்பதற்காகவே அவர் இவ்வாறு வருகிறாரோ என்று ரசிகர் ஒருவர் இதற்கு கமெண்ட் தெரிவித்து இருந்தார்.
ரசிகர்களின் ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகளில் இந்த ஒரு கமெண்ட் ராஷ்மிகாவின் பார்வையில் எப்படியோ பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு பதிலளிக்கும் விதமாக, “நிச்சயமாக அப்படியெல்லாம் எதுவும் இல்லை.. தொடர் படப்பிடிப்புகளால் சரும பாதிப்புகள் ஏற்படுகின்றன. படப்பிடிப்பு இல்லாத நேரத்திலாவது சருமத்திற்கு சற்று ஓய்வு கிடைக்கட்டுமே என்று தான் மாஸ்க் அணிந்து வருகிறேன்” என்று பதிலளித்து அவரை சமாதானப்படுத்தியுள்ளார் ராஷ்மிகா.