'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சந்திரமுகி-2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது ‛பென்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். மேலும் விரைவில் காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்தை அவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கதை எழுதும் பணிகள் நடந்து வருகிறது என்று அவ்வபோது கூறி வந்தார் லாரன்ஸ். இந்த நிலையில் சமீபத்தில் காஞ்சனா-4 படத்தில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலானபோது அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், காஞ்சனா-4 படம் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது லாரன்ஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில், தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் நடித்து வருகிறேன். அதோடு காஞ்சனா-4 படத்தின் கதைப் பணிகளும் முடிந்து விட்டது. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் காஞ்சனா -4 படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.