‛காட் பிளஸ் யூ மாமே...' : ‛குட் பேட் அக்லி' இரண்டாவது போஸ்டர் வெளியீடு | மீண்டும் அனிமல் பட இயக்குனர் உடன் இணையும் ராஷ்மிகா | சூர்யா நடிக்க இருந்த 'கர்ணா' டிராப்பா ? | தாமதமாகும் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் : இயக்குனர் ஷங்கர் பதில் | கமல் Vs ரஜினி, விஜய் Vs அஜித் : ஏட்டிக்குப் போட்டியாக அப்டேட்டுகள் | வருகிற கிறிஸ்துமஸ்க்கு திரைக்கு வரும் பேபி ஜான் | உலகில் யாராலும் இப்படி நடிக்க முடியாது : கமல் குறித்து ஷங்கர் பெருமிதம் | சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு உதவிய கே.பி.ஒய்.பாலா, ஐஸ்வர்யா ராஜேஷ் | மீண்டும் அரசியலுக்கு வருகிறார் சிரஞ்சீவி? | கோட் படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற நிறுவனம் |
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அப்பாவை போல் சினிமாவில் ஆர்வம் உள்ள இவர் ‛சகாப்தம்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது அன்பு இயக்கத்தில் ‛படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். யானையை பின்புலமாக வைத்து இந்தப்படம் தயாராகிறது.
விஜயகாந்த் இறந்த சமயத்தில் சண்முக பாண்டியன் உடன் ஒரு படத்தில் நடிக்க தயார் என அறிவித்திருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதன்படி படை தலைவன் படத்தில் இவர் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஒருமாத காலமாக ராகவாவிற்காக படை தலைவன் படக்குழுவினர் காத்திருந்துள்ளனர். ஆனால் லாரன்ஸ் தனது படம் உள்ளிட்ட பல பணிகளில் பிஸியாக இருப்பதால் இதில் நடிக்கவில்லை என தெரிகிறது.
இப்போது லாரன்ஸிற்கு பதில் படை தலைவன் படக்குழுவினர் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இதில் நடிக்க வைக்க முடிவெடுத்தனர். அதன்படி விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வருவதற்கான பணிகள் இன்று(ஜூன் 22) முதல் துவங்கி உள்ளன.
இறந்த பின்னரும் தனது மகனுக்காக கைகொடுத்துள்ளார் விஜயகாந்த். அடுத்தமாதம் இறுதியில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.