'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! | தனுஷுக்கு வசூலில் புதிய மைல்கல் ஆக அமையும் 'தேரே இஸ்க் மே' | கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 'கொம்பு சீவி' | அரசுக்கே 'ஆப்பு' அடிக்கப்பார்த்த ஆர்.கே.செல்வமணி: முறைகேடுகளை மறைக்க முயற்சி? |

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அப்பாவை போல் சினிமாவில் ஆர்வம் உள்ள இவர் ‛சகாப்தம்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது அன்பு இயக்கத்தில் ‛படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். யானையை பின்புலமாக வைத்து இந்தப்படம் தயாராகிறது.
விஜயகாந்த் இறந்த சமயத்தில் சண்முக பாண்டியன் உடன் ஒரு படத்தில் நடிக்க தயார் என அறிவித்திருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதன்படி படை தலைவன் படத்தில் இவர் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஒருமாத காலமாக ராகவாவிற்காக படை தலைவன் படக்குழுவினர் காத்திருந்துள்ளனர். ஆனால் லாரன்ஸ் தனது படம் உள்ளிட்ட பல பணிகளில் பிஸியாக இருப்பதால் இதில் நடிக்கவில்லை என தெரிகிறது.
இப்போது லாரன்ஸிற்கு பதில் படை தலைவன் படக்குழுவினர் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இதில் நடிக்க வைக்க முடிவெடுத்தனர். அதன்படி விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வருவதற்கான பணிகள் இன்று(ஜூன் 22) முதல் துவங்கி உள்ளன.
இறந்த பின்னரும் தனது மகனுக்காக கைகொடுத்துள்ளார் விஜயகாந்த். அடுத்தமாதம் இறுதியில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.