22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அப்பாவை போல் சினிமாவில் ஆர்வம் உள்ள இவர் ‛சகாப்தம்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது அன்பு இயக்கத்தில் ‛படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். யானையை பின்புலமாக வைத்து இந்தப்படம் தயாராகிறது.
விஜயகாந்த் இறந்த சமயத்தில் சண்முக பாண்டியன் உடன் ஒரு படத்தில் நடிக்க தயார் என அறிவித்திருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதன்படி படை தலைவன் படத்தில் இவர் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஒருமாத காலமாக ராகவாவிற்காக படை தலைவன் படக்குழுவினர் காத்திருந்துள்ளனர். ஆனால் லாரன்ஸ் தனது படம் உள்ளிட்ட பல பணிகளில் பிஸியாக இருப்பதால் இதில் நடிக்கவில்லை என தெரிகிறது.
இப்போது லாரன்ஸிற்கு பதில் படை தலைவன் படக்குழுவினர் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இதில் நடிக்க வைக்க முடிவெடுத்தனர். அதன்படி விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வருவதற்கான பணிகள் இன்று(ஜூன் 22) முதல் துவங்கி உள்ளன.
இறந்த பின்னரும் தனது மகனுக்காக கைகொடுத்துள்ளார் விஜயகாந்த். அடுத்தமாதம் இறுதியில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.