கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து | 7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் |
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது. இவற்றில் வெற்றி படங்கள் என்றால் 10 சதவீதம் கூட இருப்பது இல்லை. இந்தாண்டு இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. இவற்றில் நல்ல லாபம் தந்த படம் அரண்மனை 4 மட்டுமே. ஸ்டார், கருடன், மகாராஜா படங்கள் ஓரளவுக்கு வசூலை தந்தன. மற்ற படங்கள் பெரும்பாலும் நஷ்டம் தான்.
கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா தள்ளாட்டத்தை சந்தித்து வருகிறது. தொடர்ந்து தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். லைகா போன்ற பெரிய நிறுவனங்களே படம் தயாரிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக நடிகர்களின் சம்பளம் உள்ளது. படத்தின் பட்ஜெட்டில் பாதி நடிகர்கள் சம்பளத்திற்கே சென்று விடுகிறது.
முன்னணி நடிகர்கள் படங்கள் வெற்றி பெற்றால் உடனே சம்பளத்தை கோடிகளில் உயர்த்தி விடுகின்றனர். ஆனால் நஷ்டம் அடைந்தால் சம்பளத்தை குறைப்பதில்லை. இந்த பிரச்னை நீண்டகாலமாகவே தொடர்ந்து வருகிறது. இதை சரி செய்யும் பொருட்டு நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க சொல்லி வலியுறுத்தி விரைவில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்கில் இறங்க முடிவெடுத்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த விஷயமும் நடக்காது. படம் ரிலீஸ் கூட தடைப்பட வாய்ப்பு உள்ளது.