சலார் சிறுவனை எம்புரானில் நடிக்க வைத்தது ஏன் ? பிரித்விராஜ் ருசிகர தகவல் | சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் ; வழக்கு விசாரணையை முடித்த சிபிஐ | ராபின் ஹுட் புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்த டேவிட் வார்னர் | ராஷ்மிகா மகளுடனும் ஜோடியாக நடிப்பேன் : சல்மான்கான் | எதுக்கு கடைசி நேர டென்ஷன் ? பிரித்விராஜ் நெத்தியடி கேள்வி | மலையாளப் படத்திற்கு முக்கியத்துவம் தரும் ரெட் ஜெயண்ட்? | பிரியதர்ஷினின் 100வது படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால் | கும்பகோணம் கோவில்களில் சோபிதா துலிபலா சாமி தரிசனம் | மூக்குத்தி அம்மன் 2 : நயன்தாரா, சுந்தர் சி மோதல், நின்ற படப்பிடிப்பு | இத்தாலி கார் ரேஸ்: 3வது இடம் பிடித்து மீண்டும் அஜித் அணி அசத்தல் |
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்தவர் பிரதீப் கே விஜயன். ‛சொன்னா புரியாது' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தெகிடி, இரும்புத்திரை, ஒரு நாள் கூத்து, மீசைய முறுக்கு, மேயாத மான், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிப்பு தாண்டி படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்து தரும் பணியையும் செய்து வந்தார்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக இவரது நண்பர்கள் இவரை அலைப்பேசியில் அழைத்துள்ளனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் வீட்டிற்கு வந்து அவரது நண்பர்கள் பார்த்தபோது வீடு உள்புறமாக பூட்டியிருந்தது. இதையடுத்து போலீசாரின் உதவியோடு உள்ளே சென்று பார்த்தபோது பிரதீப் இறந்து கிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. உடலில் அவருக்கு பிரச்னை எதுவும் இருந்ததா, மருந்து எதுவும் எடுத்து வந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இறந்த பிரதீப்பின் உடன் பிரேத பரிசோதனைக்காக சென்னை, ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரதீப்பின் திடீர் மறைவு, அதுவும் அவர் இறந்தது கூட தெரியாமல் இரண்டு நாட்கள் கடந்தது சினிமா பிரபலங்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்களும், அவருடன் பணியாற்றியவர்களும் வலைதளங்களில் இரங்கல் பதிவிட்டுள்ளனர்.