கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு |

பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா, அவரது காதலரான நடிகர் ஜாகீர் இக்பால் என்பவரை ஜூன் 23ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளையும் காதல் ஜோடி ஆரம்பித்துவிட்டதாம்.
ஆனால், சோனாக்ஷி இதுவரையிலும் தன் திருமணம் பற்றி அவரது அப்பா நடிகரும், எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவிற்கு தெரிவிக்கவில்லையாம். இது குறித்து சத்ருகன் சின்ஹா, அளித்த பேட்டி ஒன்றில், “தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நான் டில்லிக்கு வந்துவிட்டேன். எனது மகளின் திட்டங்கள் என்ன என்பது பற்றி நான் யாரிடமும் பேசவில்லை. அவர் திருமணம் செய்து கொள்கிறார் என்பதுதான் உங்களது கேள்வி. அவர் எனன்னிடம் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதே அதற்கான பதில்.
செய்திகள் மூலம் மட்டுமே அது பற்றி தெரிந்து கொண்டேன். நானும் எனது மனைவியும் அவர்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்களைத் தெரிவிப்போம். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவருடைய முடிவை நாங்கள் முழுவதுமாக நம்புகிறோம். அவர் எந்தவிதமான தவறான முடிவையும் எடுக்க மாட்டார். சொந்தமாக முடிவெடுக்க அவருக்கு உரிமை உள்ளது. இந்தக் காலத்தில் பெற்றோர்களிடம் பிள்ளைகள் எதற்கும் அனுமதி கேட்பதில்லை. அவர்கள் தகவல் மட்டுமே தெரிவிக்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
சோனாக்ஷி அவருடைய பெற்றோருக்கு இதுவரையிலும் தன்னுடைய திருமணத்தைப் பற்றி எதுவும் சொல்லாதது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.