'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
கடந்த 2012ல் விஜய்யை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால். அதைத் தொடர்ந்து அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்தார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் வில்லனாக நடிப்பதற்காக எட்டு வருடம் கழித்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் வித்யுத் ஜாம்வால்.
இது குறித்து ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே சமயம் ஏற்கனவே நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் வித்யுத் ஜாம்வால் கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு அதை உறுதிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் 12 வருடங்கள் கழித்து மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் டைரக்சனில் நடிக்கிறார் வித்யுத் ஜாம்வால்.