திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் | மகளின் குற்றச்சாட்டு : கண்ணீர் விட்டு அழுத நடிகர் பாலா | சவ்பின் சாஹிரின் மிகப்பெரிய ரசிகன் நான் : அரவிந்த்சாமி | 'தேவரா' முதல் நாள் வசூல் 172 கோடி என அறிவிப்பு | புகழ் குழந்தையின் முதல் பிறந்தநாளில் வாழ்த்திய பிரபலங்கள் |
கடந்த 2012ல் விஜய்யை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால். அதைத் தொடர்ந்து அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்தார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் வில்லனாக நடிப்பதற்காக எட்டு வருடம் கழித்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் வித்யுத் ஜாம்வால்.
இது குறித்து ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே சமயம் ஏற்கனவே நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் வித்யுத் ஜாம்வால் கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு அதை உறுதிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் 12 வருடங்கள் கழித்து மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் டைரக்சனில் நடிக்கிறார் வித்யுத் ஜாம்வால்.