ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
ஆந்திர மாநில அரசியலில் புதிய திருப்புமுனையாக நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, போட்டியிட்ட 21 சட்டசபைத் தொகுதிகள், 2 பார்லிமென்ட் தொகுதிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்றது.
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு இன்னும் இரண்டு நாட்களில் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வந்த பின் டில்லி சென்ற பவன் கல்யாண், என்டிஏ கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிலும் மனைவியோடு கலந்து கொண்டார்.
ஆந்திர திரும்பிய பின் அடுத்த சில மாதங்களுக்கு அவர் தீவிர அரசியல் பணியாற்ற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் ரீதியாக சில முக்கிய முடிவுகளையும் எடுக்க உள்ளாராம். அதனால், அடுத்த சில மாதங்களுக்கு தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளைத் தள்ளி வைக்கத் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.
தற்போது, “ஹரி ஹர வீரமல்லு, ஓஜி, உஸ்தாத் பகத்சிங்” ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் பவன் கல்யாண்.