ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஷெரின். ஆங்கிலோ இந்தியன் சமூகத்தை சேர்ந்த இவர் மாடல் அழகியாக இருந்தார். அதன் மூலம் 'போலீஸ் டாக்' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தனுஷின் முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ஸ்டூடன்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா போன்ற படங்களில் நடித்தார். கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஷெரினின் தந்தையும், தாயும் பிரிந்து வாழ்கிறார்கள். இதனால் ஷெரின் தாயின் பராமரிப்பிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் ஷெரினின் தந்தை ஒரு வாரத்திற்கு முன்பு காலமானார். ஆனால் அவர் மரணம் அடைந்தது குறித்து அவரின் குடும்பத்தினர் ஷெரினுக்கு தெரிவிக்கவில்லை. தற்போதுதான் ஷெரினுக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வேதனையை பகிர்ந்துள்ளார், “நான் உங்களை (தந்தையை) மிகவும் நேசித்தேன், என் வாழ்நாள் முழுவதும் உங்கள் அன்பிற்காக ஏங்கினேன். ஒரு வாரத்திற்கு முன்பே நீங்கள் இறந்துவிட்டீர்கள், ஆனால் இன்றுதான் எனக்கு தகவல் கிடைத்தது, அதைக்கேட்டு நான் மனமுடைந்து போனேன். உங்களது இந்தப் படம் தான் என்னிடம் உள்ளது, இது என்னிடம் எப்போதும் இருக்கும். மிஸ் யூ” என பதிவிட்டுள்ளார்.




