மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

மறைந்த திமுகவின் முன்னாள் தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கருணாநிதியின் வரலாற்று புகைப்பட கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டது.
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் படத்தில் நடித்து வரும் நடிகர் ஜீவா அவருடன் சென்று இந்த கண்காட்சியை பார்வையிட்டார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கருணாநிதி பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இங்கு வந்து பார்க்கும் போது, சினிமாவைத் தாண்டி முதல்வராக அவர் செய்ததைப் பார்க்க முடிந்தது. கிட்டதட்ட 40 வருஷம் மக்களுக்காக பணி செய்திருக்கார். அதை ரொம்ப அழகாக இங்கு வைத்துள்ளனர். வெளிநாட்டில் மியூசியம் இருப்பது போல் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. குறிப்பாக ஹாலோகிராமில் கலைஞர் பேசியது சிறப்பாக இருந்தது என்றார்.
கருணாநிதியின் வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்பட்டால் அதில் நடிப்பீர்களா? என்ற கேட்டபோது “கண்டிப்பாக நடிப்பேன். அதுவும் கருணாநிதியாககூட நடிப்பேன். காரணம் தெலுங்கில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை படத்தில் நடித்த அனுபவம் இருக்கிறது. கருணாநிதியின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பதைவிட வெப் தொடராக எடுப்பதே சிறந்தது. காரணம் அவரது வாழ்ககையை இரண்டரை மணி நேர சினிமாவுக்குள் சொல்லிவிட முடியாது” என்றார்.




