எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
'அரண்மனை 4' படம் மூலம் 100 கோடி வசூலைப் பெற்றார் இயக்குனர் சுந்தர் சி. இந்த ஆண்டில் துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு. அப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அடுத்தும் தமன்னா, சுந்தர் சி கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சிவாவின் உதவியாளர் பூபாலன் என்பவர் தமன்னாவிடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அதில் நடிக்க தமன்னாவும் சம்மதம் சொல்லியிருந்தாராம். அப்படத்தைத் தயாரிப்பதாக இருந்த நிறுவனம் தற்போது அவரிடமிருந்து கதையை மட்டும் நல்ல தொகை கொடுத்து வாங்கிவிட்டதாம்.
அந்தக் கதை சுந்தர் சிக்கும் பிடித்துப் போகவே அவரும் அதே கதையை இயக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வரும் என்கிறார்கள்.