வசூல் சாதனை படைக்குமா 'கல்கி 2898 ஏடி' ? | தனி விமானத்தில் பேச்சுலர் பார்ட்டி நடத்திய எமி ஜாக்சன் | நேசிப்பாயா : ஆகாஷ் முரளி பட டைட்டில் அறிவிப்பு | ஜோடி பொருத்தம் பிரமாதம் : சித்தார்த் - அதிதியை வாழ்த்திய ரேகா | படத்திற்கு படம் எனது வேடத்தில் ஒரு தாக்கத்தை கொடுக்க விரும்புகிறேன் : ஷர்வரி | 4 வருடம் காத்திருந்து தன்மீதே நம்பிக்கை வந்ததும் நடிக்க சம்மதித்த பார்வதி | உன்னி முகுந்தன் படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் திலகனின் பேரன் | ஐடென்டிடி படப்பிடிப்பை நிறைவு செய்த வினய் ராய் | நாகார்ஜூனாவை தொடர்ந்து தனுஷின் பாடிகார்டும் ரசிகரை தள்ளிவிட்டார் | 106 வயது 'இந்தியன்' தாத்தா : இயக்குனர் ஷங்கர் விளக்கம் |
'அரண்மனை 4' படம் மூலம் 100 கோடி வசூலைப் பெற்றார் இயக்குனர் சுந்தர் சி. இந்த ஆண்டில் துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு. அப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அடுத்தும் தமன்னா, சுந்தர் சி கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சிவாவின் உதவியாளர் பூபாலன் என்பவர் தமன்னாவிடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அதில் நடிக்க தமன்னாவும் சம்மதம் சொல்லியிருந்தாராம். அப்படத்தைத் தயாரிப்பதாக இருந்த நிறுவனம் தற்போது அவரிடமிருந்து கதையை மட்டும் நல்ல தொகை கொடுத்து வாங்கிவிட்டதாம்.
அந்தக் கதை சுந்தர் சிக்கும் பிடித்துப் போகவே அவரும் அதே கதையை இயக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வரும் என்கிறார்கள்.