''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
'அரண்மனை 4' படம் மூலம் 100 கோடி வசூலைப் பெற்றார் இயக்குனர் சுந்தர் சி. இந்த ஆண்டில் துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு. அப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அடுத்தும் தமன்னா, சுந்தர் சி கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சிவாவின் உதவியாளர் பூபாலன் என்பவர் தமன்னாவிடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அதில் நடிக்க தமன்னாவும் சம்மதம் சொல்லியிருந்தாராம். அப்படத்தைத் தயாரிப்பதாக இருந்த நிறுவனம் தற்போது அவரிடமிருந்து கதையை மட்டும் நல்ல தொகை கொடுத்து வாங்கிவிட்டதாம்.
அந்தக் கதை சுந்தர் சிக்கும் பிடித்துப் போகவே அவரும் அதே கதையை இயக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வரும் என்கிறார்கள்.