என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழில் 'ரெபல்' என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை மமிதா பைஜு. அந்தப் படம் இங்கு சரியாக ஓடவுமில்லை. ஆனாலும், 'பிரேமலு' மலையாளப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து ரசித்து மமிதாவைக் கொண்டாட ஆரம்பித்தனர்.
இன்றைய இளம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறும் அளவிற்கு அவர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் மமிதா. நேற்று சென்னையில் உள்ள மால் ஒன்றில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதற்காக அந்த மாலுக்குள் வந்த மமிதாவை சென்னை ரசிகர்கள் மிரள வைத்துவிட்டார்கள்.
அவரைப் பார்க்க அதிக கூட்டம் கூடியது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக இல்லாததால் மமிதாவை நெருங்கியது கூட்டம். எப்படியோ தட்டுத் தடுமாறி அவரை கடைக்குள் அழைத்து வந்து கடையைத் திறந்துவிட்டனர். ஒரு பக்கம் ரசிகர்களின் அன்பு மழையில் மமிதா நனைந்தாலும் கூடிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் விட்டார்.
தமிழில் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்தால் நயன்தாராவின் இடத்தை எளிதில் பிடித்துவிடுவார் மமிதா.