‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் | மகளின் குற்றச்சாட்டு : கண்ணீர் விட்டு அழுத நடிகர் பாலா | சவ்பின் சாஹிரின் மிகப்பெரிய ரசிகன் நான் : அரவிந்த்சாமி | 'தேவரா' முதல் நாள் வசூல் 172 கோடி என அறிவிப்பு |
'விடுதலை' படத்திற்குப் பிறகு கதையின் நாயகனாக சூரி நடித்த 'கருடன்' படம் நேற்று வெளியானது. துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சசிக்குமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நேற்று வெளியான இப்படத்திற்கு விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக அமைந்துள்ளன. அதனால், நேற்று மாலை காட்சி, இரவுக் காட்சிகளுக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதாகத் தகவல்.
ஏ சென்டர்களை விட பி அன்ட் சி சென்டர்களில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய முதல் நாள் வசூலாக சுமார் 3 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களின் வரவேற்பு இன்னும் அதிகமாகும் என்றும் தெரிகிறது.
அதனால், 'விடுதலை' படத்தை அடுத்து இந்தப் படத்திலும் நாயகனாக சூரி வெற்றி பெறுவார் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.